×

டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு ரயில் நகர் பகுதியை சேர்ந்தவர் அகமது ரியாஸ் (39), டாஸ்மாக் கடை பணியாளர். கடந்த 7ம் தேதி வீட்டிற்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர் வழிமடக்கி சரமாரியாக தாக்கி ரூ.2500ஐ பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அகமது ரியாஸ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி ஓட்டேரி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (எ) எலி (22) என்பவரை கைது செய்தனர். பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தப்பி சென்ற இவரது கூட்டாளிகள் வெங்கடேசன் மற்றும் சூர்யா ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் வெங்கடேசன் மற்றும் சூர்யா கோயம்பேடு மார்க்கெட்டில் மது அருந்துவது போலீசாருக்கு தெரிய தெரியவந்தது. நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் கோயம்பேடு மார்க்கெட்டில் மது அருந்தும் பகுதியில் கண்காணித்தனர். பிறகு மது குடிக்க வந்த செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் சென்னை ஓட்டேரி சத்தியவாணி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) மஞ்சப்பை (24) என்பதும் இவர் மீது இரண்டு திருட்டு வழக்கு உள்ளதும், கூட்டாளி அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மேக சூர்யா (எ) பேய் குழந்தை (23) என்பதும், இவர் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

The post டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Annanagar ,Ahmed Riaz ,Koyambedu Rail Nagar ,Ahmed ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு